திருக்குறள்

Saturday, March 3, 2012

பாம்பாட்டிச் சித்தர்


"பூசை செய்தாலே சுத்தபோதம் வருமோ?
பூமிவலம் செய்ததனாற் புண்ணியம் உண்டோ?
ஆசையற்ற காலத்திலே ஆதி வஸ்துவே
அயைடலாம் என்று துணிந்து ஆடாய் பாம்பே!"

இறைவனுக்கு பூசை செய்கிறேன் பேர்வழி என சதா சர்வகாலமும் ஏதேனும் சடங்குகளை செய்வதாலும், அவரைப் பார்த்து புண்ணியம் தேட போகிறேன் என ஊர் ஊராய் கோவில் கோவிலாய் சுற்றுவதால் என்ன பலன் கிடைத்து விடும் என ஆன்மீகத்தின் அடிப்படையை இந்தப் பாடலில் கேள்விக்குள்ளாக்குகிறார் பாம்பாட்டிச் சித்தர்.

இறை நிலை என்பது இவர்கள் எண்ணுவதைப் போல ஒரு மனித உருவிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து அருள் பாலிக்கிற அம்சமில்லை. ஆதியும், அந்தமும் இல்லாத எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தத்துவ நிலை. தோற்றமில்லாத தோற்ற நிலை, எங்கும் நிறைந்திருக்கும் அத்தகைய நிலையினை நமக்குள்ளேயும் உணரமுடியும்.

இப்படியான இறை நிலையை பூசை செய்வதாலும், புண்ணியம் தேடி சுற்றுவதாலும், சமய நூல்களை படிப்பதாலும் அடைய முடியாது.தேவையற்ற சஞ்சலங்களுக்கு பலியாகாமல் சுயநலம் கடந்த பொது நலத்தோடு வாழ்ந்தால் எங்கும் நிறைந்திருக்கும் இறைநிலையினை உணர்ந்து அனுபவிக்க முடியும்.அந்த நிலைக்கு தன்னையும் உயர்த்திக் கொள்ள முடியுமென்கிறார்.

No comments:

Post a Comment